மாதவிடாய்ப் பெண்ணுடன் உடலுறவு கூடுமா?

 


மாதவிடாய்ப் பெண்ணுடன் உடலுறவு கூடுமா? 



பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவளின் கணவன் அவளிடம் உடலுறவு கொள்ளக் கூடாது. இந்த மாதவிடாய் என்பது குறைந்தது முன்று நாட்கள் முதல் அதிகபட்சமாக பத்து நாட்கள் காரை கூட ஏற்படும் இந்த நாட்களில் உடலுறவு வைத்து கொள்ளக் கூடாது. 



அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: 



மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்குரான் : 2:222)



அனஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.



யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் வீட்டில் சேர்ந்து அமர மாட்டார்கள்: பருக மாட்டார்கள். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடமும் கூறப்பட்டது. அப்போது "மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் தீட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்" அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் பொழுது "உடலுறவை தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்" என்றார்கள்.


நூல்: முஸ்லிம்



திருமறை வசனமும் ஹதிஸும் மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உடலுறவு கொள்வதை வன்மையாகக் கண்டிக்கின்றன. மாதவிடாய் நீங்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். 



எனினும் மாதவிலக்குக் காலத்தில் மனைவியை அணைத்துக் கொள்ள, முத்தமிட அனுமதி உள்ளது; உடலுறவு மட்டும்தான் விலக்கப்பட்டுள்ளது என்பதை மேலே குறிப்பிடப்பட்ட யூதர்கள் ஹதீஸ் மற்றும் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து உறுதியாக அறியலாம்:



''எங்களில் ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும்போது கீழாடைக் கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் (ஆடை கட்டிக் கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்'' அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரலி) அன்னை மைமூனா (ரலி)


 நூல்கள்: புகாரி, முஸ்லிம்.



நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது, கணவன் அவளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்குஆயிஷா (ரலி) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்றவை அனைத்தும் (அனுமதிக்கப்பட்டுள்ளன)'' என்றுபதிலளித்தார்கள். (தாரிமீ)


Comments