மனைவியின் மார்பகங்களை சுவைகலாமா? அவற்றிலிருந்து பால் அருந்தலாமா?

 


மனைவியின் மார்பகங்களை சுவைகலாமா? அவற்றிலிருந்து பால் அருந்தலாமா?

மார்பகங்களைச் சுவைத்தல் போன்ற காரியங்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. பால் இருப்பின் அது குழந்தைக்குரிய உணவு என்பதால் அதை தவிர்த்துக் கொள்ளலாம் என்று தான் கூறமுடியுமே தவிர. ஹராம் என்று கூறிவிட முடியாது. பால் குடித்து விட்டால் உறவு மாறி விடும். குழந்தை தாய் உறவு என்றாகி விடும் என்று சிலர் கூறுவர். இது தவறு என்பதை இந்த ஹதிஸ் முலம் நாம் அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

பால்குடி பருவத்தில் இரைப்பையைச் சென்றடையும் விதமான பாலுட்டுதல் தவிர மற்றவை (திருமண உறவை) ஹராமாக்காது. இது பால்குடி மறக்கடிக்கப் படுவதற்கு முன்பு நிகழ வேண்டும்.

அறிவிப்பவர் : உம்மூஸாமா (ரலி) நூல்: திர்மிதி.

மேலும் அல்குர்ஆனின் இந்த வசனமும் இதற்க்கு சான்று

(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குரான் 2-233)

மற்றும்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல்குரான் 31-14)

இந்த இரண்டு வசனங்கள் படி பால்குடி வயது என்பது அதிகபட்சம் இரண்டு வருடங்கள் என்பது விளங்குகிறது. எனவே அந்த வயதுக்கு மேல் உள்ள ஒருவன் தன் மனைவியிடம் பால் குடித்துவிட்டால் மகனாகி விடுவான் என்று சொல்வது தவறு.

எனவே கணவன் தனது மனைவியின் மார்பகங்களை சுவைக்கலாம் இதற்க்கு இஸ்லாத்தில் தடை இல்லை.

Comments