பாலியல் சந்தேகங்கள்

கேள்வி – எனக்கு 28 வயதாகிறது. எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக
திருமணம் ஆனது. உடலுறவு கொள்ள மிகவும் ஆர்வமிருந்தும் என் குறி
விறைப்புக் கொள்வதில்லை. முதல் முயற்சியில் பிரச்சனையில்லை. ஆனால்
இரண்டாம் முறை ஈடுபட முயற்சிக்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது. முதல்
முயற்சியில் நான் நிறுத்தி தொடரும் முறையை மேற்கொண்டால், விந்து
வெளிப்படுவதற்கு முன்பே விறைப்புத் தன்மை இழக்கப்படுகிறது. தயவுசெய்து
உதவவும்.


பதில் – எப்போது போதும் என்று உங்கள் உடல் சொல்லும். இரண்டாவது முறையை
தவிர்க்க வேண்டும் அல்லது சில மணிநேரத்திற்கு தள்ளிப் போட வேண்டும்.
முதல் உறவுக்கு முன்பாக ஒருவருக்கொருவர் திருப்திப்படுத்தும் வகையில்
சிறப்பாக முன் விளையாட்டில் ஈடுபடவும்.

கேள்வி – எனக்கு 25 வயதாகிறது. எனது காதலனுக்கு பால்வினை சரும நோய்
(ஹெர்பிஸ்) உள்ளது. இது என்ன நோய்? அவரை திருமணம் செய்வது சரியா? இது
எனது பாலுறவு வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாங்கள் குழந்தை
பெற்றுக் கொள்ளலாமா? திருமண வாழ்க்கை சாதாரணமான ஒன்றாக இருக்குமா? நான்
முத்தமிடலாமா? நான் எனது பெற்றோரிடம் சொல்லலாமா?

பதில் – பிறப்புறுப்பில் ஏற்படும் ஹெர்பிஸ் தொற்றுநோயுள்ள ஒருவருடன்
உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். இதற்கு வைத்தியம் கிடையாது. ஆனால் அதனை
தடுக்க மருந்துகள் உள்ளன. இது கொப்புளங்கள் இருக்கும்போது தொற்றக்
கூடியது. நீங்கள் முடிவெடுக்கும் முன்பாக ஒரு சரும நிபுணர் மற்றும் பெண்
மருத்துவரை பார்ப்பது நல்லது என்று அறிவுறுத்துவேன். எனவே, முத்தமிடுவது
உட்பட அவருடன் உடலுறவு கொள்வது நல்லதில்லை. உங்களால் சாதாரணமான தாம்பத்ய
வாழ்க்கை வாழ முடியாது. குழந்தை பெற்றுக் கொள்வதும் அபாயமானதே. நீங்கள்
கண்டிப்பாக இது பற்றி உங்கள் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அவர் உங்களிடம்
வெளிப்படையாக இருப்பதால், நீங்கள் நல்ல நண்பர்களாக இருந்து விட்டுப்போவதே
சிறந்தது என்பேன்.

கேள்வி – எனக்கு வயது 26. கடந்த எட்டு ஆண்டுகளாக நீரிழிவு நோய்
இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, எனக்கு குறைவான பாலுணர்வு ஏற்படுகிறது,
சோம்பேறித்தனமான விறைப்புத்தன்மை, ஆர்வமின்மை போன்றவை ஏற்படுகின்றன.
என்னுடைய எச்பிஏ1சி 6.2, 6.5, 6.7 ஆக இருந்து வந்தது, கடைசியாக 7.3%
இருந்தது. நான் ஹூயூமன் மிக்ஸ்டேர்ட் 30/70 இருமுறை (40 யூனிட்கள்
காலையில், 30 யூனிட்கள் மாலையில்), பினோம்-10 (ஆல்மெச்ரடான்
மெடோக்ஸோமில்), ஆப்டிசுலின் மல்டிவிட்டமின் கேப்சூல் எடுத்துவருகிறேன்.
தற்போது போட்டி தேர்வுகளுக்காக மும்முரமாக தயாராகி வருகிறேன். தேர்வு
அழுத்தம், இதர இயற்கை உடல் அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இவை உடல், மன ஆரோக்கியம் தொடர்பான மலட்டுத்தன்மை, விறைப்பின்மை போன்ற
வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதையும் நான் அறிவேன்.

பதில் – ஆம், நீரிழிவு ஆண் விறைப்பு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியது.
மேலும் (உங்களைப் பொறுத்தவரை) பல ஆண்டுகள் இருந்து சிறப்பாக
கட்டுப்படுத்தாவிட்டால் இவ்வாறு ஆகும். உங்கள் மருத்துவரை சந்தித்து
சிறந்த கட்டுப்பாட்டை பெற அவரிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்த
விரும்புகிறோம்.

மேலும் உங்கள் பிரச்சனைக்கான துல்லியமான காரணங்களை அறிந்துகொள்ள நீங்கள்
வேறு பல சோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். இதற்காக பதட்டப்படவோ,
ஏமாற்றமடையவோ தேவையில்லை. உங்கள் பத்தியம், உடற்பயிற்சி மற்றும்
மருந்துகளை எடுத்துக்கொள்வதை கடைப்பிடித்தாலே நீங்கள் உங்கள்
திருமணத்திற்கு முன்பாகவே சரியாகி விடலாம்.

கேள்வி – எனக்கு 47 வயதாகிறது. இரண்டு மகள்கள் உள்ளனர். எனது கணவர்
ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை
உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார். இதுதான் பிரச்சனை. ஆனால் எனக்கு அது
விருப்பமில்லை. அதேபோல பல ஆண்டுகளாக உறவில் ஈடுபடுவதால் எனது குறி அகன்று
விட்டதாக தோன்றுகிறது. அதனால்தான் எனக்கு உறவு பிடிக்கவில்லையா? அதை
இறுக்கமாக்கி உறவை இன்பமாக்க நான் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவரின் பதில் – உங்கள் சந்தேகங்களை உறுதிசெய்துகொள்ள பெண்
மருத்துவரை சந்திக்கவும். உங்கள் குறியை இறுக்கமாக்கும் அறுவைச்
சிகிச்சையை செய்துகொள்ள பரிந்துரைக்கப்படலாம். அதேவேளையில், உங்கள்
குறியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு உடற்பயிற்சி அளிக்கும் என்பதால் நீங்கள்
இணையங்களில் பார்த்து கெஜல் உடற்பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம்.

கேள்வி – நான் புதிதாக மணமானவள், எனக்கு வயது 24. நானும் என் கணவரும்
பிரச்சனையில்லாத உடலுறவு சுகம் பெற்று வருகிறோம். ஆனால் உடலுறவின்போது
அந்த சுகத்தை, பரவசத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை. என் கணவரின் குறி
விறைப்புக்குப் பின் 4.5444.5 – 5 அங்குலம் நீளம் உள்ளது. உடலுறவை
அனுபவிக்க, உச்சநிலையை அனுபவிக்க என்ன செய்யலாம்? அதேபோல அவரது குறியின்
நீளம் எனக்கு சுகத்தை தர போதுமானதா?

மருத்துவரின் பதில் – உங்கள் கணவர் உடலுறவை ஆரம்பிக்கும் முன்பாக ஒரு
உச்சநிலையைப் பெற அவரை முன்விளையாட்டில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளவும்.
அவருக்கு விந்து வெளிப்படும்போது, அவரது உடலில் விளையாடுவது அல்லது
அவரின் விரல்களை பயன்படுத்தி இரண்டாவது உச்சநிலையை பெறவும்.



விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? -

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி
இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு
விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். குழந்தைப் பிறப்பு
என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது
தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு
பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர்
கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட
முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:
இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை
நிறுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி
நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து
விட வேண்டும். குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே
கொட்டிவிட்டால்,
அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பரிசோதிக்கப்படுபவை,
* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4
கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக
இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே
கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட
குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும். விந்துவில்
உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க
வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த்
தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை
குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும். நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக
இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய
பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே
என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள
வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம்,
கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த
முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை
அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

என் வயது 28. எனக்கு பெண்களை கண்டால் பயம், படபடப்பு. பெண்களிடம் பேச
கூச்சமாக உள்ளது. என் பாலியல் உறுப்பில் குறையில்லை, திருமணம் செய்து
கொண்டு நான் எப்படி இல்லற இன்பம் அனுபவிப்பது?

உங்களுக்கு இருக்கும் நிலைக்கு ஆன் ஸைடி நீயூரோஸில் என்று பெயராகும்.
பொதுவாக நீங்கள் பெண்களிடம் அதிகம் பழகாமல் இருப்பதனால், அவர்களை
சந்திக்கும்போதெல்லாம், நாம் பக்குவமாக நடந்துகொள்ள முடியுமோ? என்கிற
சந்தேகம் வந்து, உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லாமல் போகிறது.
இந்த தன்னம்பிக்கை இல்லாமல் பயப்படுவதனால்தான் நெஞ்சு படபடப்பு, பயம்
எல்லாம் பெண்களை கண்டால் ஏற்படுகிறது. உடம்பு மற்றபடி குறையில்லாமல்
இருந்தது என்றால் நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். ஒன்றை
ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். யாரும் பிறக்கும்போதே எல்லா திறமையுடன்
பிறக்கவில்லை. திறமை என்பது பழக பழகத்தான் வரும்.

பெண்களை கண்டவுடனே எனக்கு என்னமோ போல் உண்டாகி விடுகிறது. சகஜமாக
அவர்களுடன் இணைந்து பணி புரியவும் இயலவில்லை. குறியும் அடிக்கடி எழுச்சி
அடைந்து விடுகிறது. என்ன காரணம்?

இதற்கு காரணம்- உங்கள் மனதில் எப்போதும் செக்ஸ் பற்றி இருக்கும்
யோசனைதான். உங்களுடன் பணிபுரியும் பெண்களை பெண்களாக கருதாமல்,
உங்களுடன்கூட பணிபுரியும் இன்னொரு ஆக கருதுங்கள். இதுபோல நினைக்கும்போது
ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் உங்களுக்கு பணியை குறித்த
சிந்தனைதான் இருக்குமே தவிர செக்ஸ் சிந்தனை வராது. இதுமட்டு மின்றி
உங்களுக்கு இருக்கும் ஓய்வு நேரத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு உண்டான
தேர்வுக்கு படித்தல், அல்லது விளையாட்டு காரியங்களில் ஈடுபடுவதனால்
உங்கள் சிந்தனை சரியான முறையில் திசை மாறும்.

கூந்தல் நீண்டிருக்கும், உடம்பில் கை, காலில் அதிகம் முடியிருக்கும்
பெண்களுக்கு காம உணர்வு அதிகம் என்கிறார்களே, உண்மையா? ஆம் எனில் எதனால்?

இந்த கருத்து உண்மையல்ல. ஒரு பெண்ணின் உடம்பில் முடிஅதிகமாக இருக்ககாரணம்
அந்த பெண்ணின் உடம்பு அமைப்பும், ஒரு சில பெண்களுக்கு ஹார்மோன்
குறைபாட்டினாலும் அதிகமாக முடியிருக்கலாம். இது முடி அளவுக்கும்
காமத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உண்டு. ஆனால் என்
மனைவி செக்ஸில் திருப்தி ஏற்படவில்லை என்கிறார். அவளை எப்படி
திருப்திபடுத்தலாம்?

திருப்தி என்பது ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. இது மனதை பொறுத்தது.
ஒருத்தருக்கு எது திருப்தி தருகிறதோ அதே செயல்பாடு மற்றவருக்கு திருப்தி
தராமல் போகலாம். நீங்கள் உங்கள் மனைவியை கேளுங்கள், மனம் விட்டுப்
பேசுங்கள், எதை எதிர்பார்க்கிறார்கள், என்ன செய்தால் திருப்தி வருமென்று
நினைக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டு அறிந்து
கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு துரித ஸ்கலிதம் இருந்தால் உங்கள் மனைவி
திருப்தியுறாமல் போகலாம். அல்லது தேவைப்பட்ட அளவு உணர்ச்சிவசப்பட
வைக்கும் அளவு பாலியல் நடவடிக்கை களில் ஈடுபடாமல் இருக்கலாம். இதை
நீங்கள் கண்டறிந்து நீங்கள் அதற்கேற்ப நடந்து திருப்திப்படுத்த வேண்டும்.

பாலியல் சந்தேகங்கள் /தலைப்பு 
நன்றி//tamilcnnlk .com 

Comments

  1. இன்று நான் உறவு கொண்டதால் கருத்தரித்தாயிற்று என வைத்துக்கொள்வோம். மீண்டும் நாங்கள் நாளையும், வரும் நாட்களில் உறவு கொள்வதால் கரு களைந்திடுமா?? தயவு செயுது பதில் கூறவும்.
    லேட்டஸ்ட் கமென்ட்ஸ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முன்விளையாட்டு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது

இஸ்லாத்தில் தாம்பத்திய உறவு

Voluntary sucking of wife milk.